தற்கொலைகளும் - தமிழின உணர்வுகளும்
தமிழினம் இலங்கையில் இராஜபக்சேவும், விடுதலைப்புலிகளும் போட்டி போட்டுக்
கொண்டு அழித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசை கண்டிக்க வேண்டிய அதே
நேரத்தில் தீவிரவாத இயக்கமான விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு தமிழகத்தில்
பெருகி வருவது கவலையளிக்கிறது.
இலங்கையில் மனிதநேய நடவடிக்கைகளும் போர் நிறுத்த வலியுறுத்தல்களும்
துரிதப்படுத்தபட வேண்டிய சூழலில் தன் இன்னுயிரை
மாய்த்துக் கொள்வதும் பயங்கரவாத இயக்கத்தை கடவுளின் படையாக சித்தரித்துக்
கொள்வது்ம் கவலையளிக்கிறது. இரு பயங்கரவாத குழுக்களுக்கள் அடித்துக்
கொள்வதில் சாதாரண மக்கள் சாக வேண்டுமென்ற தலைவிதியை நொந்துக் கொள்வதா
இல்லை ஒரு முத்துக்குமரனை முன்னுதரனமாக வைத்து பல முத்துக்குமரன்களை
உருவாக்க
முயல்வதும் தனி தமிழ்நாடு என்ற கோஷங்களை எழுப்பச் செய்யும் தூண்டிகளை
நொந்துக் கொள்வதா?
முத்துக்குமரனின் மரணத்தை அடுத்து வரிசையாக நடந்த தற்கொலை முயற்சிகள்
http://puthinam.com/full.php?2b34OO44b33M6DNe4d45Vo6ca0bc4AO24d2ISmA2e0dU0MtHce03f1eW0cc2mcYAde
http://www.nankooram.com/jegathesan-malaysia
http://thatstamil.oneindia.in/news/2009/02/03/tn-student-arrested-for-attempting-to-commit.html
http://thatstamil.oneindia.in/news/2009/02/03/tn-youth-who-attempted-suicide-undergoes-operation.html
http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=846
இந்த இலட்சணத்தில் மீடியாக்கள் முத்துக்குமரனின் மரணத்தை இருட்டடிப்பு
செய்து விட்டது என்ற புலம்பல்கள் வேறு. மீடியாக்கள் இருட்டடிப்பு செய்யும்
போதே இவ்வளவு தற்கொலை முயற்சிகள் என்றால்???
இந்திய தேசியக்கொடியும் கொல்லப்படுகிறது இங்கே

எங்கே செல்கிறது இந்த பாதை?